Monday, January 2, 2012

ஈழத்தின் சிறந்த இளம் பாடலாசிரியர்களுக்கான விருதுகள் 2011

இலங்கை கலைஞர்கள் சங்கம் நடாத்திய ஈழத்தின்  இளம் பாடலாசிரியர் 2011 இற்கான போட்டி முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இளம் பாடலாசிரியர்களான முல்லை நிசாந்தன்,பொத்துவில் அஸ்மின்,எஸ்.வீ.ஆர் பாமினி,நெடுந்தீவு முகிலன்,சாந்தருபன் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டிருந்தனர்.

உலகெங்கிலும் பரந்து வாழும் தமிழ் மக்களிடம் நடத்தப்பெற்ற   கருத்து கணிப்பின் படி  கல்லறைப் பூக்கள், விடியலைக்காண, தியாகத்தின் மூச்சு என பல ஆல்பங்களில் பாடல்களை எழுதிய  ஈழத்து பெண் கவிஞரான எஸ்.வீ.ஆர்.பாமினி முதலாவதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

எங்கோ பிறந்தவள், காந்தள் பூக்கும் போன்ற பாடல்களை எழுதிய பொத்துவில் அஸ்மின் இரண்டாவது இடத்தையும்,

நெடுந்தீவு முகிலன் மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஈழத்தின் இசைத்துறையில் மணம் வீச தொடங்கியிருக்கும் இக்கவிஞர்களை நம்கலை சார்பாக சிகரம் தொட வாழ்த்துகிறோம்.

No comments:

Post a Comment